×

சங்கரன்கோவில் அருகே பெண் விஏஓவை தாக்கிய தலையாரி கைது

சங்கரன்கோவில், பிப். 6: சங்கரன்கோவில் அருகே பெண் விஏஓ தாக்கப்பட்டார். இதுதொடர்பாக தலையாரியை போலீசார் கைது செய்தனர்.சங்கரன்கோவில் தாலுகா வடக்கு புதூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் பவானி (43). இருமன்குளத்தை சேர்ந்தவர் சுந்தரய்யா (53). வடக்குபுதூரில் தலையாரியாக இருந்த இவர் தற்போது சேர்ந்தமரம் அருகேயுள்ள நடுவக்குறிச்சியில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் சம்பவத்தன்று விஏஓ பவானி, தனது அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த சுந்தரய்யா, தான் வடக்கு புதூருக்கு பணிமாறுதல் பெற்று வந்திருப்பதாக விஏஓ பவானியிடம் கூறினார். ஆனால் அவர் இதுதொடர்பாக தனக்கு தகவல் ஏதும் வரவில்லை. தாசில்தாரிடம் சென்று தெரிவிக்குமாறு கூறினார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விஏஓ பவானியை, சுந்தரய்யா தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து பெண் விஏஓவை தாக்கியதாக சுந்தரய்யாவை கைது செய்தனர்.

Tags : Thalaiyari ,Sankarankoil ,VAO ,
× RELATED இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்